Friday, October 26, 2018

அரகண்டநல்லூர் - அதுல்யநாதேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா 
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி 
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல் 
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால்                                தொழுவார்களே

அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும்,
வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின்
கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள்
கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர் என திருஞானசம்பரால் பாடப்பெற்றது. - இரண்டாம் திருமுறை.

ஊர்: அரகண்டநல்லூர், (பழைய பெயர் திரு அறையணிநல்லூர் ),  திருக்கோயிலூர் அருகில்.

மூலவர்: அதுல்யநாதேஸ்வரர்

அம்பாள்: அழகிய பொன்னழகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: தென்பெண்ணை

தரிசனம் பெற்றவர்கள்: 

ஸ்தல வரலாறு : பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம். கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன.

ஆலய சிறப்புகள்: இந்த கோயில் குன்றின் மீது உள்ளதால் திருவண்ணாமலை கோயில் கோபுரத்தை இங்கிருந்து தரிசனம் செய்யலாம். திருஞானசம்பந்தர் அவ்வாறு இங்கிருந்து தரிசித்து ஒரு பதிகம் பாடியுள்ளார். ஸ்வாமிகளின் பாதம் கோயில் வெளி பிரகாரத்தில் காணலாம்.

தரிசன பயன்கள்: பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.

எப்படி செல்வது : திருக்கோவிலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு வர நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: திருக்கோயிலூர், திருவண்ணாமலை 

தரிசன நேரம் :7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment