Friday, October 26, 2018

திருநாவலூர் - திருநாவலேஸ்வரர்

தேவார பாடல் :
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, 
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; 
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட 
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், ‘அம்பு எய்தலில் வல்லவர்’ எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ‘திருமால், பிரமன், இந்திரன்’ என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும் என சுந்தரரால் பாடப்பெற்றது  - ஐந்தாம் திருமுறை.

ஊர்: திருநாவலூர்  

மூலவர்: பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்

அம்பாள்: மனோன்மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி

ஸ்தல விருட்சம்: நாவல்

தீர்த்தம்: கோமுகி தீர்த்தம்

வழிபாடு செய்தவர்கள் : மஹாவிஷ்ணு, சுக்ரன், பார்வதி, சண்டிகேஸ்வரர்

ஸ்தல வரலாறு : இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

ஆலய சிறப்புகள்: திருநாவலூர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அவதாரம் செய்த ஊராகும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.சுக்ர தோஷ பரிகார ஸ்தலம்.

தரிசன பயன்கள்:  சுக்ர  தோஷம்  நீங்கும் .

எப்படி செல்வது : சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்லும் போது மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ சென்றால் ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம்

தரிசன நேரம் :காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.







No comments:

Post a Comment