Sunday, March 24, 2019

கரையபுரம்-கரவீரேசுவரர் கோயில்

தேவார பாடல் :
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: வடகண்டம் கரையபுரம், கரவீரம், திருவாரூர் மாவட்டம்,  பழைய பெயர் திருக்கரவீரம்.


மூலவர்: கரவீரேசுவரர்

அம்பாள்: பிரத்தியட்ச மின்னம்மை

ஸ்தல விருட்சம்: அலரி

தீர்த்தம்: அனவரத தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கௌதம முனிவர் 

ஸ்தல வரலாறு : கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும்.கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

ஆலய சிறப்புகள்: இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நீண்ட பாணத்தை உடைய லிங்க திருமேனி.

தரிசன பயன்கள்: திருமண தடை நீங்கும், குழந்தைகள் நோய் தீர்க்கும் ஸ்தலம் மற்றும் சரும நோய் குணமடையும் என்பதும் ஐதீகம்.

எப்படி செல்வது : திருவாரூரில் இருந்து மேற்கே கும்பகோணம் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை


No comments:

Post a Comment