Wednesday, December 26, 2018

திருவிளநகர் - உச்சிரவனேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண 
                                                      ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு 
                                                        காவிரி 
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை 
                                                     நண்ணினார், 
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல்
உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை
விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம்
அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை  பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: திருவிளநகர்,மயிலாடுதுறை மாவட்டம்.

மூலவர்: துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர், உசிரவனேசுவரர்

அம்பாள்: வேயுறுதோளியம்மை

ஸ்தல விருட்சம்:விழல்

தீர்த்தம்: காவிரி, மெய்ஞ் ஞான தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : 
முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.

ஆலய சிறப்புகள்: 
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்

தரிசன பயன்கள்: துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம். வினை பயன்கள் விலகும்.

எப்படி செல்வது : மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிமீ கிழக்கு திசையில் உள்ளது. மயிலாடுதுறை-அக்கூர் சாலையில் உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை




No comments:

Post a Comment