Saturday, December 29, 2018

திருவாய்மூர்- வாய்மூர்நாதர் கோயில்

தேவார பாடல் :
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனர தென்கொலோ.

தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்? என அப்பர் பாடியுள்ளார். அப்பர் 2 பதிகங்களும் திருஞானசம்பந்தர் 1 பதிகமும் பாடியுள்ளனர்.

ஊர்: திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்

மூலவர்: வாய்மூர்நாதர்

அம்பாள்: பாலின் நன்மொழியாள்,க்ஷீரோப வசனி

ஸ்தல விருட்சம்: பலா

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : இந்திரன் மகன் ஜெயந்தன் பைரவர் அருளால் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன, 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது . ஆனால் இப்போது நான்குதான் தான் இருக்கின்றன.

திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார்.

தரிசன பயன்கள்: பைரவர் அருளால் திருமண தடை நீங்கும், வறுமை நீங்கி செல்வவளம் பெறலாம்.

எப்படி செல்வது : வேளாங்கன்னி -திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ளது. சீராவட்டம் பேருந்து நிறுத்தத்தில் வலது புறம் 1.5 கிமீ செல்லவேண்டும். நாகபட்டினத்திலுருந்து 30 கிமீ

எங்கே தங்குவது: வேளாங்கன்னி  அல்லது நாகப்பட்டினம் 

தரிசன நேரம் :.காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment