Sunday, February 17, 2019

கூவம்-திரிபுராந்தகர் கோயில்

தேவார பாடல் :
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே

அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.

ஊர்: கூவம், திருவள்ளூர் மாவட்டம், பழைய பெயர் கூவரம்.

மூலவர்: திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர்

அம்பாள்: சோமாஸ்கந்தர்

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: அக்னி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

ஆலய சிறப்புகள்: முன்பு ஒரு காலத்தில் சென்னையில் ஓடி கொண்டிருக்கும் கூவம் நதியின் பிறிப்பிடமாக இந்த இடம் கருதப்படுகிறது. இந்த கோவிலிலுள்ள அக்னி தீர்த்தத்தில் கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : 
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது

எங்கே தங்குவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் 

தரிசன நேரம் :.காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7-30 மணி வரை






No comments:

Post a Comment