Saturday, January 19, 2019

கிளியனூர்- அகஸ்தீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
தார் சிறக்கும் அணி வள்ளலின் சிறக்கும் துணைப்பதம்
உண்ணுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும்
கிளியன்ன வூரனே

என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: கிளியனூர், விழுப்புரம் மாவட்டம், தேவார பெயர் திருகிளியன்னவூர்

மூலவர்: அகத்தீஸ்வரர்

அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

ஸ்தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: கன்வ தீர்த்தம், அக்னி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கன்வ மகரிஷி, சுகர் முனிவர்

ஸ்தல வரலாறு : கன்வ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளுக்கு தீராத கொடிய நோய் இந்த ஸ்தலம் வந்து வழிபட்டதால் நிவர்த்தி பெற்றனர். சுக பிரம்மரிஷி இந்த ஸ்தலத்தில் வழிபாட்டு தனது வயிற்று வலி நீங்கப்பெற்றார்.

ஆலய சிறப்புகள்: சுயம்பு மூர்த்தி, சிவபெருமான் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள ஆலயம். அகத்தியரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்.

தரிசன பயன்கள்: வயிற்று வலி நிவாரணம் தரும் கோயில், இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும்.

எப்படி செல்வது : பாண்டிச்சேரி - திண்டிவனம் நெடுஞசாலையில் கிளியனூர்  கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே கிளியனுர்  செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் கிளியனூர் கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் : காலை 6  மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


No comments:

Post a Comment